சீனத் தூதரகத்தின் பிரதிப் பிரதானி சூ யன்வெய், ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இதன்போது சீனா – இலங்கை இருதரப்பு உறவுகளை பல்வேறு துறைகளில் மேலும் விரிவுபடுத்துவது குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளது.
அத்துடன், சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு மற்றும் பரஸ்பர மரியாதை என்பன குறித்து இதன் போது நினைவுகூரப்பட்டதுடன், இரு நாடுகளுக்குமிடையிலான சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான புதிய வழிமுறைகள் குறித்தும் ஆராயப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.