ஜனாதிபதி – ஆளும் தரப்புகளுக்கு இடையில் சந்திப்பு!

0
151

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும் தரப்பின் உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று, நேற்று இடம்பெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றிருந்த இந்த சந்திப்பில் நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

சந்திப்பில் பொதுஜன பெரமுனாவின் மாவட்டத் தலைவர்கள், பங்காளி கட்சிகளின் தலைவர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.