நாட்டு மக்களுக்கும் ஜனாதிபதிக்கும் சிறந்த நாட்டை உருவாக்கும் எதிர்பார்ப்புடன் ஆசிவேண்டி பொன்னறுவை சோமாவதி விகாரை வளாகத்தில் ஆசிர்வாத பிராத்தனை நிகழ்வொன்று எதிர்வரும் 31ஆம் திகதி நடத்த ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது. இதன்போது ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கு கிடைக்கும் முதலாவது சந்தர்ப்பத்திலேயே தேர்தலை நடத்த வழி ஏற்படவேண்டும் என பிரார்த்திக்க இருப்பதாக கட்சியின் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார். ஐக்கிய தேசிய கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை தெரிவித்தார். மேலும் சஜித் பிரேமதாசவின் நடவடிக்கைகளில் தாங்கள் கரிசணை கொள்ளமாட்டோம் எனவும், நிவாரணம் வழங்கி இந்த நாட்டை முன்னேற்ற முடியாது எனவும் தெரிவித்த பாலித்த ரங்கே பண்டார், சஜித் பிரேமதாச ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட வரப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.