ஜனாதிபதி தான் தேர்தலில் போட்டியிடப்போவதாக எங்கும் வெளிப்படையாக கூறவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா சஜித் பிரேமதாசவிற்காக செயற்படவில்லை என்பத தெளிவாகின்றது. அவருடன் ஒரு அணியினர் உள்ளனர் அந்த வகையில் தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் செய்யப்படும் போது அவருடன் இணைந்து ஒரு குழு நிச்சயம் எதிரணியிலிருந்து விலகி செல்லும்.
அத்துடன் தற்போதைய ஜனாதிபதி தான் தேர்தலில் போட்டியிடப்போவதாக எங்கும்வெளிப்படையாக கூறவில்லை. அவர் எம்முடன் கலந்துரையாடல்களில் ஈடுபட்டு வருகின்றார்.