ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த நால்வர் பிணையில் விடுதலை

0
138

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி நுழைந்தமை குறித்து கைதுசெய்யப்பட்டிருந்த மேலும் நான்கு சந்தேகநபர்கள், பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

குறித்த வழக்கு கொழும்பு – கோட்டை நீதிவான் திலின கமகே முன்னிலையில் இன்று விசாரணைக்கு அழைக்கப்பட்டது.

இதன்போது, சந்தேகநபர்களை 5 இலட்சம் ரூபா மதிப்பிலான சரீரப் பிணையில் விடுவிக்க நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

அதேநேரம், சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் முன்னேற்றத்தை, நீதிமன்றுக்கு அறிக்கையிடுமாறு, காவல்துறைக்கு நீதிவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.