ஜனாதிபதி மீது மக்கள் நம்பிக்கை அதிகரித்து செல்கின்றது – அனுப பஸ்குவல்

0
62

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேலைத்திட்டங்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை அதிகரித்து செல்வதாக சமூக வலுவூட்டுகை இராஜாங்க அமைச்சர் அனுப பஸ்குவல் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

தேர்தல் முறைமை ஊழல் மோசடிக்கு முக்கிய காரணமாக இருக்கின்றது. ஊழல் மோசடிக்கு எதிரானவர்கள் ஆயின் உரிய கொள்கை பிரகடனத்தை முன்வைக்குமாறு அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அணியினருக்கு தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றோம்.

நாட்டை கொள்கையொன்றனை செயற்படுத்துவதன் ஊடாகவே மாற்ற முடியும். பொருளாதார வளர்ச்சிக்கு ஏற்ற அடித்தளம் புதிய ஆட்சியில் இடப்படும். புதிய அடித்தளமொன்று ரணில் விக்கிரமசிங்கவினால் இடப்பட்டுள்ளது.அந்த விடயமே தற்போது செயற்படுத்தப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் பொருளதார வளர்ச்சி திட்டத்தின் ஊடாக பொருளாதார நெருக்கடிகள் அனைத்தும் அகன்றுள்ளது.

இத்தகைய பின்னணியில் அநுர சஜித்தின் மீது மக்கள் கொண்ட நம்பிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ஆனால் அரசாங்கத்தை கொண்டு நடத்த ரணில் விக்கிரமசிங்க முன்னெடுக்கும் வேலைத்திட்டங்கள் மீது மக்கள் கொண்ட நம்பிக்கை அதிகரித்து செல்கின்றது. ஆகவே தேர்தல் நெருங்கும் போது ஜனாதிபதி முன்னெடுக்கும் வேலைத்திட்டம் பாரிய வெற்றியை தழுவும்.