அமெரிக்காவில் இவ்வாண்டு இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் மீண்டும் போட்டியிடவுள்ளார். அவரை எதிர்த்து எதிர்க்கட்சியான குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் களமிறங்கியுள்ளார். அக்கட்சியின் வேட்பாளர் தேர்வில், டிரம்புக்கு அதிக ஆதரவுள்ளது. எனவே, ஜனாதிபதி தேர்தலில் ட்ரம்ப் போட்டியிடுவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அவர் போட்டியிட்டால் வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகம் என கருத்துக்கணிப்புகளும் கூறி வருகின்றன.
இந்நிலையில், குடியரசுக் கட்சி சார்பில் வேட்பாளர் தேர்வுக்கான தேர்தலில் தெற்கு கரோலினா மாகாணத்தில் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் வெற்றி பெற்றுள்ளார். முன்னாள் மாகாண கவர்னர் நிக்கி ஹாலே மற்றும் ட்ரம்ப் இடையே கடும் போட்டி நிலவி வருகிறமை குறிப்பிடத்தக்கது.