ஜப்பானில் உள்ள விகாரை ஒன்றில் இளைஞன் ஒருவரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்த முயற்சித்தமை தொடர்பில் மாகல்கந்தே சுதந்த தேரர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பான காணொளியொன்றும் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவிவருகின்றது.
இதன்போது விகாரைக்குள் நுழைந்த குறித்த இளைஞனின் உறவினர்கள் தேரருடன் வாக்குவாதத்தில் ஈடுபடுவதையும், தாக்குதலில் ஈடுபடுவதையும் காணக்கூடியதாக உள்ளது.
சம்பவம் தொடர்பான காணொளியை முன்னாள் அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.