ஜம்மு, காஷ்மீர் பயங்கரவாதத் தாக்குதல் – சந்தேகநபர்கள் மூவரின் வரைபடம் வெளியீடு

0
8

இந்தியாவின் ஜம்மு, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தியவர்கள் என சந்தேகிக்கப்படும் மூவரின் வரைபடங்கள் வெளியிடப்பட்டுள்ளது. தாக்குதலில் காயம் அடைந்த மற்றும் தாக்குதலை நேரில் பார்த்தவர்கள் வழங்கிய வாக்குமூலத்தின் அடிப்படையில் வரைபடம் உருவாக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இந்தியாவின் ஜம்மு, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நேற்று மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 28 பேர் உயிரிழந்தனர். ஜம்மு, காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் உள்ள பைசரன் பள்ளத்தாக்கில் சுற்றுலாப் பயணிகள் மீது பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலை மேற்கொண்டனர்