ஜி-20 தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவிற்கு அமெரிக்காவைத் தொடர்ந்து பிரான்சும் ஆதரவு

0
136

ஜி-20 தலைமையை ஏற்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தோனேஷியாவில் நடைபெற்ற ஜி-20 மாநாட்டின் முடிவில் ஜி-20 அமைப்பிற்குஇ இந்த வருடம் இந்தியா தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளது. இதற்கான மாநாட்டையும் இந்தியா அடுத்த வருடம் தலைமை ஏற்று நடத்தவுள்ளது. இந்த பொறுப்பு பிரதமர் நரேந்திர மோடி வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து ஜி-20 மாநாடு அடுத்த வருடம் நடைபெற்றுமுடியும் வரை இந்த தலைமைப் பொறுப்பு இந்தியா வசம் இருக்கும். இந்நிலையில்இ ஜி 20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ள இந்தியாவுக்கு பிரான்ஸ் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளது. பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:- ‘ஒரு பூமிஇ ஒரு குடும்பம்இ ஒரு எதிர்காலம். ஜி20 தலைவர் பதவியை இந்தியா கைப்பற்றியது! எனது நண்பர் நரேந்திர மோடிஇ ‘உலகில் சமாதானத்தை உருவாக்கிடஇ அமைதியைக் கட்டியெழுப்ப இன்னும் நிலையான உலகைக் கொண்டு வந்திட எங்களை ஒன்றிணைப்பார் என நம்புகிறேன்’ என பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பதிவிட்டுள்ளார்.