டிக்கோயாவில் மரம் அடியோடு சாய்ந்ததில் இரு பெண் தொழிலாளர்கள் வைத்தியசாலையில்!

0
100

நுவரெலியா மாவட்டம் நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட டிக்கோயா இன்ஜஸ்றி பீரட் தோட்டப்பிரிவில் 03ம் இலக்க தேயிலை தோட்டத்தில் பாரிய சவுக்கை மரம் ஒன்று முறிந்து விழுந்ததில், இரு பெண் தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.

தேயிலை கொழுந்து பறித்துக் கொண்டிருந்த இரண்டு பெண் தொழிலாளர்கள் மீதே, சவுக்கை மரம் முறிந்து வீழ்ந்தது.

இன்று காலை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவரும், டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாள் சம்பளத்திற்காக நோர்வூட் பகுதியில் இருந்து டிக்கோயா இன்ஜஸ்றி பீரட் தோட்டப்பகுதிக்கு தொழிலுக்கு சென்ற 15 தொழிலாளர்கள் தொழிலில் ஈடுபட்டு கொண்டிருந்த போதே மரம் அடியோடு சாய்ந்துள்ளது.

இதேவேளை இன்று காலை முதல் மலையகத்தில் பலத்த காற்றுடன் கூடிய காலநிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.