28 C
Colombo
Thursday, September 19, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

டிக்டோக் பிக்கு கைது!

விஸ்வ புத்தர்’ என தம்மை அடையாளப்படுத்திக் கொண்டு பௌத்தம் தொடர்பில் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்டுள்ளார். அறிக்கைகளின்படி, குறித்த நபரின் சமூக ஊடகப் பதிவுகள் பௌத்த மதத்திற்கு அவமரியாதையாகக் கருதப்படும் உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கின்றன.
இரத்தினபுரி பிரதேசத்தை சேர்ந்த 34 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.ஃபேஸ்புக், டிக் டோக், யூடியூப் ஆகியவற்றில் நேரலை வீடியோக்களை சில சமயங்களில் சாதாரண உடையிலும், சில சமயங்களில் துறவியின் வேடத்திலும் வெளியிடும் இவர், சமூக வலைதளங்களில் தீவிர விவாதத்திற்கு ஆளாகி வருகிறார்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles