டீ.ஏ.ராஜபக்ஷவின் 53ஆவது நினைவு தின நிகழ்வு இன்று

0
349

அமரர் டீ.ஏ.ராஜபக்ஷவின் 53ஆவது நினைவு தின நிகழ்வு, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று தங்காலையிலுள்ள டீ.ஏ.ராஜபக்ஷவின் உருவச்சிலையடியில் இடம்பெற்றது.
இந்த நினைவு தின நிகழ்வு, பிரதமரின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ, அமைச்சர் சமல் ராஜபக்ஷ மற்றும் அமைச்சர் நாமல் ராஜபக்ஷ உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் பங்கேற்புடன் கொரோனா தொற்று நிலைமைக்கு மத்தியில் முறையான சுகாதார வழிகாட்டல்களுடன், வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பங்கேற்பாளர்களுடன் மிகவும் எளிமையாக இடம்பெற்றது.