டெக்ஸாஸின் டலஸில் உள்ளவணிக வளாகத்தில் இடம்பெற்ற துப்பாக்கிசூட்டு சம்பவத்தில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளதை அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர்.
நபர் ஒருவர் மேற்கொண்ட தாக்குதலில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன – தாக்குதலை மேற்கொண்டவரும் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்- அவர் தனியாக செயற்பட்டார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தை தொடர்ந்து அலெனில் உள்ள வணிகவளாகத்திலிருந்து நூற்றுக்கும்மேற்பட்டவர்கள் வெளியேற்றப்பட்டனர்.
கொல்லப்பட்டவர்களில் சிறுவர்களும் உள்ளனர் – ஏழுபேர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் உட்பட ஏழுபேர் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டுள்ளனர் மேலும் இருவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகத்தை செவிமடுத்த காவல்துறை உத்தியோகத்தர் ஒருவர் அந்த பகுதிக்கு சென்று தாக்குதலை மேற்கொண்டு சந்தேகநபரை செயல் இழக்கச்செய்துள்ளார் என பொலிஸ் அதிகாரிதெரிவித்துள்ளார்.
ஐந்து முதல் 51 வயதானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர் என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
வீடியோக்களை அடிப்படையாக வைத்து அந்த பகுதியில் காணப்பட்ட மக்களை ஆதாரங்களிற்காக தங்களுடன் தொடர்புகொள்ளுமாறு எவ்பிஐயினர் தெரிவித்துள்ளனர்.
கறுப்பு உடையணிந்த நபர் ஒருவர் தாக்குதலை மேற்கொண்டதை பார்த்ததாக சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
முதலில் பத்து துப்பாக்கிசூட்டு சத்தங்கள் கேட்டன அதன் பின்னர் பத்து முதல் பதினைந்து துப்பாக்கி பிரயோகங்கள் இடம்பெற்றன என கறுப்பு உடையணிந்த நபர் பொதுமக்களை நோக்கி துப்பாக்கிபிரயோகத்தை மேற்கொள்வதை பார்த்தேன் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கி பிரயோகம் சத்தம் கேட்பதையும் மக்கள் வாகனதரிப்பிடத்தை நோக்கி ஓடுவதையும்வீடியோக்கள் காண்பித்துள்ளன.