நாட்டில் கடந்த வாரத்தில் 1,590 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அவர்களில் 50.8வீதமானவர்கள் மேல் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அக்குறணை, மாத்தளை மாநகரசபை, அம்பலாங்கொட, வாரியபொல, எஹலியகொட, அம்பிலிப்பிட்டிய மற்றும் கலிகமுவ ஆகிய 56 வைத்திய அதிகாரி பிரிவுகள் டெங்கு அபாய வலயங்களாக அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.