மட்டக்களப்பு புளியந்தீவு பொதுசுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் இன்றைய தினம் டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் பணிப்புரைக்கமைய, நாடளாவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டம், டெங்கு நுளம்பின் தாக்கம் அதிகமுள்ள மாவட்டமாக இனங்காணப்பட்டுள்ள நிலையில், மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள்
பணிப்பாளர் வைத்தியர் முரளீஸ்வரனின், பணிப்புரைக்கமைய, பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் இ.உதயகுமார் தலைமையில், டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
புளியந்தீவு பொதுசுகாதார பரிசோதகர் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகர் மற்றும் நகரை அண்டிய வாவிக்கரை பகுதிகளில், நீர் தேங்கி இருக்க கூடிய பிளாஸ்டிக் மற்றும் கொள்கலன்கள் அகற்றப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டது.