நாட்டில் கடந்த சில நாட்களாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் வைத்தியர் சுதத் சமரவீர, கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய போது இதனை தெரிவித்தார்.
இம்மாதத்தில் கடந்த 8 நாட்களில் மாத்திரம் 2,416 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதில் 54 வீதம் அல்லது அதிகமான நோயாளிகள் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளனர்.
அதன்படி கடந்த 8 நாட்களில் கொழும்பு மாவட்டத்தில் 728 நோயாளர்களும் கம்பஹா மாவட்டத்தில் 354 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.
களுத்துறை மாவட்டத்தில் இந்த மாதம் 233 நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதன்படி, இவ்வருடம் இதுவரையில் 26,622 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.