Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
கொழும்பில் இருந்து டெல்லி நோக்கிச் சென்ற யுஎல் 195 விமானம் இந்தியாவின் இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டதாக வெளியான ஊடகச் செய்திகள் தவறானவை என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தெரிவித்துள்ளது.கடந்த புதன்கிழமை UL 195 விமானத்திற்கு அவசரநிலை எதுவும் அறிவிக்கப்படவில்லை என ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.எவ்வாறாயினும், விமானம் அதன் மூன்று ஹைட்ராலிக் அமைப்புகளில் ஒன்றில் ஒரு சிறிய சிக்கலை எதிர்கொண்டதாகக் கூறிய விமான நிறுவனம், அவ்வப்போது இதுபோன்ற விடயங்கள் நடப்பதாகவும், விமானக் குழுவினர் அவற்றைக் கையாள முழுப் பயிற்சி பெற்றதாகவும் தெரிவித்துள்ளது.
“ஒரே ஒரு ஹைட்ராலிக் அமைப்பின் முழு செயற்பாட்டையும் இழப்பது செயல்திறனைப் பாதிக்காது அல்லது விமானத்தை அவசரமாக தரையிறக்க அழைப்பு விடாது. வழக்கமான முன்னெச்சரிக்கையாக, இயக்கக் குழுவினர் டெல்லியில் தரையிறங்குவதற்கு நீண்ட ஓடுபாதையைப் பயன்படுத்துமாறு கோரினர். தரையிறக்கம் பாதுகாப்பாகவும் எந்த அசம்பாவிதமும் இன்றி செயற்படுத்தப்பட்டது மற்றும் லைன் பராமரிப்பு பணிக்காக விமானம் பார்க்கிங் ஸ்டாண்டிற்கு டாக்ஸி கொண்டு செல்லப்பட்டது. விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் தங்கள் பயணத்திற்கு எந்த இடையூறும் இல்லாமல், விமானத்தில் இருந்து பாதுகாப்பாகவும், திட்டமிடப்பட்ட நேரத்திற்கு முன்னதாகவும் வெளியேறினர், ”என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் தனது பயணிகள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் முதலிடம் கொடுப்பதாகவும், இந்த உணர்வில்தான் UL 195 இன் விமானிகள் விமானத்தில் பயணிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக தரையிறங்கும் நடைமுறைகளைப் பின்பற்றி உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர்.