தங்கமுலாம் துப்பாக்கி: நீதிமற்றில் துமிந்த இன்று ஆஜர் தங்கமுலாம் துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வெள்ளிக்கிழமை (23) கைது செய்யப்பட்ட முன்னாள் அமைச்சரும் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளருமான துமிந்த திசாநாயக்க, கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (24) ஆஜர்படுத்தவுள்ளார். தங்க முலாம் பூசிய துப்பாக்கி மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் , திம்பிரிகஸ்யாயவில் உள்ள தொடர்மாடி ஒன்றில் வைத்து இவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெள்ளவத்தையில் உள்ள ஒரு சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் தங்க முலாம் பூசப்பட்ட ரி-56 ரக துப்பாக்கி கடந்த 20 ஆம் திகதி கைப்பற்றப்பட்டது