தங்க நகை திருடனால், மாலபே – கஹந்தோட்டை பிரதேசத்திலுள்ள மக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகின்றனர். குறித்த பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்குள் பல தடவைகள் புகுந்து பல்வேறு பொருட்களை திருடியுள்ளார். இந்த சந்தேகநபர் போதைப்பொருள் பாவனைக்கு அதிகம் அடிமையாகியுள்ளமையும் தெரியவந்துள்ளது. சந்தேகநபர் பியகம பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் திருடியுள்ளார். மாலபே கஹந்தோட்டை பிரதேசத்தில் உள்ள கடையொன்றில் இருந்த பெண் ஒருவரிடமும், வீதியில் நடந்து சென்ற பெண் ஒருவரின் தங்க நகைகளையும் சந்தேக நபர் நேற்று முன்தினம் திருடிக்கொண்டு தப்பிச் சென்றுள்ளார்.