இலங்கை தனிப்பட்ட தரவு பாதுகாப்பு அதிகார சபை தலைவராக சிரேஷ்ட பட்டயக் கணக்காளர் அர்ஜுன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார்.
நாட்டில் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாக்கும் நோக்கில் ஸ்தாபிக்கப்பட்ட குறித்த அதிகார சபைக்கு, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
முன்னாள் அரச சட்டவாதி நிசித் அபேசூரிய, ஜனாதிபதி சட்டத்தரணி சௌமியா அமரசேகர, டிஜிட்டல் சட்ட நிபுணரும் தனிப்பட்ட தரவு பாதுகாப்பு சட்ட வரைவு குழுவின் தலைவருமான ஜயந்த பெர்னாண்டோ, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் சுலக்ஷன ஜயவர்தன ஆகியோர் பணிப்பாளர் சபையின் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சர்வதேச தர நிர்ணய அமைப்பின் சான்றளிக்கப்பட்ட கணக்காய்வாளர் பிம்சர செனவிரத்ன, பொறியியல் மற்றும் டிஜிட்டல் மூலோபாய நிபுணர் ஷெஹான் விஜேதிலக ஆகியோர் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தெற்காசியப் பிராந்தியத்தில் தனிப்பட்ட தரவுகளைப் பாதுகாப்பதற்காக சட்டம் இயற்றிய முதல் நாடாக இலங்கை பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.