தனது வழக்கை ஜூரி சபையின்றி விசாரணை நடத்துமாறு இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்க சிட்னி டவுனிங் சென்டர் மாவட்ட நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தனுஷ்கவின் சட்டத்தரணிகள் விடுத்த கோரிக்கைக்கு அமைய, இந்த வழக்கை நீதிபதி முன்னிலையில் மாத்திரம் விசாரணைக்கு எடுக்குமாறு கோரிக்கை விடுக்கும் வரை இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைக்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவிக்கின்றன.