தப்பிச்செல்ல முற்பட்ட கைதி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

0
130

கேகாலை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் தப்பிச் செல்ல முற்பட்டபோது சிறைச்சாலை அதிகாரியொருவரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

இன்று (08) அதிகாலை குறித்த கைதி தப்பிச் செல்ல முயன்றுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளரும், ஊடகப் பேச்சாளருமான சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இவர் இம்புல்கொடவத்தை மெல்சிறிபுர பகுதியைச் சேர்நத 33 வயதான ஒருவராவார்.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்த இந்த நபர், சிறைச்சாலைக்கு வெகு தொலைவில் உள்ள மாநகர சபை கட்டடத்திற்கு அருகிலுள்ள காணியில் விழுந்து கிடந்த நிலையில், சிறைச்சாலை அதிகாரிகளால் மீட்கப்பட்டு கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டபோது, உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ளது.