13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் மற்றும் 1987 ஆம் ஆண்டு வாக்குறுதிகளை முழுமையாக நடைமுறைப்படுத்த தமிழ் அரசியல் கட்சிகள் வலியுறுத்தியுள்ளமை வழமை போன்ற செயற்பாடாக இருந்தாலும் இப்போது இதனை சாதாரணமாக கருத முடியாது என
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவர் ரோஹன லக்ஸ்மன் பியதாச தெரிவித்துள்ளார்.
ஆகவே தமிழர் தரப்பின் பிரச்சினைகளை செவிமடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டிய கட்டாயம் உள்ளதெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டின் அரசியல் முரண்பாடுகள் தொடர்பில் கருத்து வெளியிடும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
‘நாட்டின் தற்போதைய நெருக்கடி நிலைமையில் தமிழர் தரப்பு இந்தியாவுடன் தனிப்பட்ட தொடர்புகளை ஏற்படுத்துவது
குறித்து கவனம் செலுத்தப்படுகின்றது.
13 ஆம் திருத்த சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தல் மற்றும் 1987 ஆம் ஆண்டு வாக்குறுதிகளை முழுமையாக
நடைமுறைப்படுத்த வலியுறுத்தியுள்ளமை வழமை போன்ற செயற்பாடாக இருந்தாலும் இப்போது இதனை சாதாரணமாக
கருத முடியாது.
இன்று சீனா ஜப்பான் ஒருபக்கம் பலமடைந்து வருகின்ற நிலையில் அமெரிக்க தலைமையில் இந்தியா அவுத்திரேலியா உள்ளிட்ட நாடுகளின் கூட்டணி உருவாக்கப்பட்டு வருகின்றது.
இந்த போட்டியில் இலங்கை சிக்கிக்கொண்டுள்ளது, இதில் தமிழர் தரப்பின் நகர்வுகள் அவதானிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
வௌ;வேறு நாடுகளுடன் நாம் பகுதி பகுதியாக இணைய நினைப்பது ஆரோக்கியமான விடயம் அல்ல.
நாடாக ஒரே கொள்கையில் பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அதற்காக முதலில் தேசிய மட்டத்தில் சகல தரப்பையும் ஒன்றிணைந்து பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க வேண்டும்.
தமிழர் தரப்பின் பிரச்சினைகளை செவிமடுத்து அவர்களின் நியாயமான கோரிக்கைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுக்க வேண்டும்.
இனியும் தவறான கொள்கையில் அரசாங்கம் பயணித்தால் ஒட்டுமொத்த நாடுமே பாதாளத்தில் விழும்’ எனவும் அவர் எச்சரித்துள்ளார்.