தமிழ்த் தேசிய கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

0
76

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் பங்காளி கட்சிகளில் ஒன் றான ரெலோ – தமிழ் பொது வேட்பாளர் தொடர்பான அதன் உத்தி யோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை ஆதரிப்பதாகவும் ஏனைய கட்சிகளும் அதனை ஆதரிக்க வேண்டும் என்னும் கோரிக் கையை ரெலோ முன்வைத்திருக்கிறது.
ரெலோவின் நிலைப்பாடு ஏனைய கட்சிகள் தங்களின் நிலைப் பாட்டை வெளிப்படுத்த வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியுள் ளது. மக்கள் அமைப்புகளின் கூட்டிணைவு தமிழ்த் தேசிய பரப்பிலுள்ள கட்சிகள் அனைத்துடனும் சந்திப்புகளை மேற்கொண்டிருந்தது. இதன் போது, அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியை தவிர ஏனைய கட்சி கள் அனைத்தும் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை கொள்கை ரீதியாக ஆதரிப்பதாகத் தெரிவித்திருந்ததுடன் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்த கால அவகாசத்தை கோரியிருந்தன. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் ரெலோவின் உத்தியோகபூர்வ நிலைப்பாடு வெளியாகியிருக்கின்றது.
தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது என்பது, அடிப்படையில் ஒரு தமிழ் தேசிய நிலைப் பாடாகும். தமிழ்த் தேசிய அரசியலை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் கட்சிகள் தங்களின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதற்கு இனியும் தாமதிக்கக்கூடாது. ஜனாதிபதித் தோதலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்த வேண்டும் என்னும் நிலைப்பாடு திடீரென்று உதித்த ஒன்றல்ல – மாறாக, கடந்த பதினைந்து வருடகால அரசியல் அணுகுமுறை தோல் விகளின் விளைவாகும். சம்பந்தன் தலைமையிலான கடந்த பதி னைந்து வருடகால அரசியல் அணுகுமுறைகள் குறிப்பிட்டு சொல்லக் கூடிய வெற்றிகளை பதிவு செய்திருந்தால் இவ்வாறானதொரு நிலைப்பாடு தேவைப்பட்டிருக்காது.
ஆனால், வெறுமனே தென்னிலங்கையையுடன் இசைந்து செல்வது என்னும் சம்பந்தனின் அணுகுமுறை தமிழர் அரசியலை மிகவும் மோசமான நிலையில் பாதித்திருக்கின்றது. யுத்தத்துக்குப் பின்னரான காலப்பகுதியில் மேலும் ஐக்கியப்பட்டிருக்க வேண்டிய தமிழினம் மேலும் சிதறடிக்கப்பட்டிருக்கின்றது.
2010இல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பக்கமாக மட்டுமே திரண்டிருந்த தமிழினம் தற்போது பல கட்சிகளின் பக்கமாக சிதறியிருக்கின்றது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்முரண்பாடுகளுக்குள் சிக்குண்டு சீரழிந்ததே இதற்கான காரணமாகும். இவை அனைத்துக்கும், சம்பந்தனின் தூரநோக்கற்ற தலைமைத்து வமே காரணமாகும். இப்போதும்கூட, சம்பந்தன் தவறுகளை புரிந்து கொண்டதாகத் தெரியவில்லை அதேபோன்று சம்பந்தனின் அனைத்து அரசியல் அணுகுமுறை தோல்வியிலும் பிரதான பங்காளியாக இருந்த எம். ஏ. சுமந்திரனும்கூட, இப்போதும் கடந்த பதினைந்து வருடகால தங்களின் தவறுகளுக்கு பொறுப்புக்கூறும் மனோநிலையை இதுவரையில் வெளிப்படுத்தவில்லை.
தவறுகளுக்கு பொறுப்புக்கூறும் தற்துணிவு இருந்திருப்பின் தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை பொதுவெளி களில் எதிர்க்கும் நிலைப்பாட்டை எடுத்திருக்க மாட்டார்கள். எனவே, தமிழ் பொது வேட்பாளர் நிலைப்பாட்டை கொள்கை அடிப்ப டையில் ஆதரிக்கும் அனைத்து கட்சிகளும் தங்களின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை உடனடியாக வெளிப்படுத்த வேண்டும். ஒன்றில் ஆத ரித்தோ அல்லது எதிர்த்தோ தங்களின் நிலைப்பாடு என்ன என்பதை மக்களுக்கு சொல்ல வேண்டும்.