தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள்
என்ன செய்கின்றனர்?

0
459

தமிழ் மக்கள் பொருளாதார சுமையால் கடுமையாக பாதிக்கப்பட்டுக் கொண் டிருக்கின்றபோது, மக்களின் பிரதிநிதிகளான தமிழ்த் தேசிய பாராளுமன்ற
உறுப்பினர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றனர் என்னும் கேள்வி எழு கின்றது. பாராளுமன்றம் கூடுகின்றபோது, கூடுவதும், பின்னர் பாராளுமன்றம் கலைகின்றபோது, கலைவதற்கும் அப்பால், நமது பாராளுமன்ற உறுப்பினர்கள்
உண்மையிலேயே என்ன செய்கின்றனர்? பாராளுமன்ற பேச்சுக்களில்கூட அவர்கள் எந்த மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனரோ, அந்த மக் கள் எதிர்கொள்ளும் பிரத்தியேக பிரச்னைகள் தொடர்பில் எவரும் பேசுவதாகத் தெரியவில்லை.
ரணில் தொடர்பிலும், கோட்டாபய தொடர்பிலும்தான் அதிகம் பேசுகின்றனரே
தவிர, மக்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகள் தொடர்பில் கவனம் செலுத்துவதை காணமுடியவில்லை. தமிழ்த் தேசியத்தை பிரதிநிதித்துவம் செய்வதாகக் கூறிக்கொள்ளும் ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும், தங்களைத் தெரிவு
செய்த, குறிப்பிட்ட மாவட்டங்களை சேர்ந்த மக்களின் குரலாகவும் இருக்க
வேண்டும். ஆனால், அவ்வாறு எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக, கிழக்கு தமிழ் மக்களின் பிரச்னைகள் தொடர்பில் எவருமே பேசுவதில்லை. கிழக்கு மாகாணத்தில், தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு நான்கு பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கின்றனர்.
இதில் சாணக்கியன் ஒருவரின் குரலை அடிக்கடி கேட்க முடிகின்றது. ஆனால், அவர் மட்டக்களப்பு மக்களின் பிரத்தியேக பிரச்னைகள் தொடர்பில் பேசியதாக சான்றில்லை. அவரின் பேச்சுக்கள் பொதுவானவையாகவே இருக்கின்றன. அதிகம் ‘நான் இருக்கின்றேன்’ – என்பதை காண்பிக்கும் நோக்கிலேயே இருக்கின்றது. திருகோணமலையில் தமிழ் மக்கள் இருக்கின் றனர், அவர்களுக்கு பிரச்னையிருக்கின்றது என்பதையே தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மறந்துவிட்டனரா – என்று கேட்குமளவுக்கே நிலைமைகள் இருக்கின்றன.
திருகோணமலையை பிரதிநிதித்துவம் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர், இரா. சம்பந்தன் கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக, தனது சொந்த மாவட் டத்துக்கு செல்லவில்லை. மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் தமிழ் பிரதி நிதி இல்லாமலேயே அனைத்து முடிவுகளும் எடுகப்படுகின்றன. அம்பாறையில் ஒரு தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் இருக்கிறார் எனச் சொல்லப் பட்டது. ஆனால், அவர் என்ன செய்கின்றார் என்பது தொடர்பில் தகவல்க ளில்லை. உண்மையில் கிழக்கு மாகாண கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பி னர்கள் ஆகக் குறைந்தது மாதம் ஒரு முறையாவது கிழக்கு மாகாண தமிழ் மக்களின் பிரச்னைகள் தொடர்பில் கூடி ஆராய வேண்டும். அதே போன்றுதான், வடக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களும் செயலாற்ற வேண்டும். பொருளாதார பிரச்னையால் தமிழ் மக்கள் எவ்வாறான நெருக்கடியை எதிர்கொள்கின்றனர். குறிப்பாக, ஏற்கனவே மூன்று தசாப்தகால யுத்தத்தால் உருக்குலைந்து போன தமிழ் மக்கள் – குறிப்பாக எல்லைப்புற கிராமங்களில் வாழும் மக்கள் எவ்வாறான பிரச்னைகளை எதிர்கொண்டுவருகின்றனர், அவர்களுக்கு உதவிகள் போய் சேர்கின்றனவா? இவ்வாறான கேள்விகளுடன் பிரச்னைகளை பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆராய்ந்து, சம்பந்தப்பட்ட அமைச்சர்கள், அதிகாரிகள், தூதரகங்கள் ஆகியவற்றை அணுகி பிரச்னை களை தீர்க்க முயற்சிக்க வேண்டும். ஆனால், இப்படியான அணுகுமுறையுடன் எந்தவொரு தமிழ் பாராளுமன்ற உறுப்பினரும் செயல்பட்டதாக சான்றில்லை. பாராளுமன்றம் செல்வது, அவ்வப்போது அறிக்கைகளை வெளியிடுவதுடன் தங்களின் கடமைகள் முடிந்துவிட்டன என்றே கருதுகின்றனர்.
தமிழ் தேசிய அரசியலிலுள்ள பிரதான பிரச்னை. பாராளுமன்ற உறுப்பினர் களை வழிடந்துவதற்கான எந்தவொரு கட்டமைப்பும் இல்லை. ஒருவர் பாராளு மன்ற உறுப்பினராக வந்தவுடன், அவர் ஒரு தனிக்கட்சியாகவே செயல்படு கின்றார். இதனால் ஒவ்வொருவரும், தங்களுக்கு சரியென்பதையே பேசுகின்ற னர் – செய்கின்றனர். ஏன் இப்படி பேசுகின்றீர்கள் என்று கேட்பதற்கு ஆளில்லை.
தமிழ் அரசு கட்சியின் தலைவருக்கு கட்சியில் என்ன நடைபெறுகின்றதென்பதே
தெரியாத நிலைமை. இதன் காரணமாகவே பாராளுமன்ற உறுப்பினர்கள்
பொறுப்பற்ற வகையிலும், தான்தோன்றித்தனமாகவும் நடந்து கொள்கின்றனர்.
இலங்கையின் பொறுப்பு கூறல் தொடர்பில் பேசுகின்றவர்கள், மறுபுறம் தங்களுக்கு வாக்களித்தவர்களுக்கு பொறுப்புச் சொல்லக் கூடியவர்களாக இல்லை. உண்மையில் ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் முதன்மையான பணி – அவர், தனக்கு வாக்களித்த மக்களுக்கு பொறுப்புக் கூறக்கூடியவராக இருக்க வேண்டும். அதாவது, தனக்கு வாக்களித்த குறித்த மாவட்டத்தின் மக்கள். அதற்கு பின்னர்தான் ஏனைய விடயங்கள் தொடர்பில் ஒருவர் சிந்திக்க வேண்டும். பாராளுமன்ற உறுப்பினர்களின் பொறுப்பற்ற செயல்பாடுகளுக்கு, தமிழ் மக்களிடமுள்ள குறைபாடுகளும் ஒரு பிரதான காரணமாகும். மக்கள் அவர்களை தட்டிக் கேட்பதில்லை.