தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றுவதற்கு, அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதே, சரியான அணுகுமுறையாக இருக்கும் என, ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில், ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற கலந்துரையாடலில், இந்த விடயம், மீண்டுமொரு முறை வலியுறுத்தப்பட்டது. அத்துடன், உருவாகியுள்ள இந்த சூழலை, அனைத்து தரப்புக்களும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனவும், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தியுள்ளார்.