தமிழ் மற்றும் சிங்கள புத்தாண்டு காலப்பகுதியில் பெரியளவிலான ஒன்றுகூடலுக்கு தடை விதிக்கப்படும் என கொரோனா கட்டுப்பட்டு இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்னாண்டோ புள்ளே தெரிவித்தார்.
இருப்பினும் விடுமுறை நாட்களில் பயணக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவில்லை எனவும் கூறினார்.
குடும்பங்கள் ஒன்று கூடுவது தடைப்படும் என்பதனால் பயணக் கட்டுப்பாடுகள் குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவில்லை எனவும், இருப்பினும் புத்தாண்டுக்கு முன்னதாக பொலிஸார், சுகாதார அதிகாரிகள் வழிகாட்டுதல்களை வழங்குவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.