தற்போதைய அரசாங்கம் மாணவர்களின் கல்வியை இல்லாமல் செய்துள்ளது – ஜோசப் ஸ்டாலின்

0
194

தற்போதைய ரணில் – ராஜபக்ஷ அரசாங்கமானது பாடசாலை மாணவர்களின் கல்வியை இல்லாமல் ஆக்கியுள்ளது என்று, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (31) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் தெரிவித்துள்ளார்.

மாணவர்கள் தங்களது கல்வியை இழந்த மூன்றாவது வருடமாக இவ்வருடம் காணப்படுகின்றது என்றும் அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.