தலைமறைவாகியிருந்த முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன 19ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

0
14

நீதிமன்றில் ஆஜரான நிலையில் கைது

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மஹர நீதவான் நீதிமன்றம் நேற்று (07) உத்தரவு பிறப்பித்துள்ளது.

போலி ஆவணங்களைத் தயாரித்து கிரிபத்கொடை பிரதேசத்திலுள்ள அரச காணி ஒன்றை விற்பனை செய்த குற்றச்சாட்டில் அவர் நேற்றுக்காலை காலை மஹர நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்த நிலையிலேயே அவரை எதிர்வரும் 19ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.இந்த காணி விற்பனை விவகாரம் தொடர்பாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிரசன்ன ரணவீரவை கைதுசெய்வதற்கு நீதிமன்றத்தினால் திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.