தல்கலஸ்வல பிரதேசத்தில் நபரொருவர் துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி மரணம்

0
143

காலி பிட்டிகல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட தல்கஸ்வல பிரதேசத்தில், நபரொருவர் நேற்று முன்தினம் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார் என்று பிட்டிகல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தல்கஸ்வல பிரதேசத்தை சேர்ந்த 31 வயது நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், மாலை வேளையில் நகருக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும்போது வீட்டுக்கு அருகிலுள்ள பாழடைந்த இடத்தில் மறைந்திருந்த நபர் துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளார் என்று தெரியவருகிறது.

துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கான நபர் எல்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு மாற்றப்படும்போது மரணமடைந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வட்டிக்கு பணம் கொடுப்பவர் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவத்துடன் தொடர்புடைய நபர் அடையாளம் காணப்படாத நிலையில் அவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.