தல்பிட்டிய போதி ரஜமஹா விஹாரையின் போதிகரய ஜனாதிபதியால் திறந்து வைப்பு

0
182

வாதுவ, தல்பிட்டிய போதி ரஜமஹா விஹாரையில், புதிதாக நிர்மாணிக்கப்பட்ட போதிகரய, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் திறந்து வைக்கப்பட்டது.
தல்பிட்டிய போதி ரஜமஹா விஹாரைக்கு நேற்று விஜயம் செய்த ஜனாதிபதி, கோட்டே ஸ்ரீ கலாயாணி சாமஸ்ரீ தர்ம மஹா சங்க சபையின் மஹாநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய இத்தேபானே தம்மாலங்கார மற்றும் அனுநாயக்கர் அதி வணக்கத்துக்குரிய கொட்டபிட்டியே ராஹூல தேரர் ஆகியோரைச் சந்தித்து ஆசீர்வாதம் பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர், விஹாரையின் புதிய பெயர்ப்பலகை மற்றும் புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள போதிகரய ஆகியவற்றை, ஜனாதிபதி திறந்து வைத்தார்.
இதன்போது அமைச்சர் ரோஹித்த அபேகுணவர்தன, நாடாளுமன்ற உறுப்பினர்களான லலித் எல்லாவல, சஞ்ஜீவ எதிரிமான்ன, அநூப பெஸ்குவல், பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன ஆகியோரும் விஹாரையின் பங்களிப்புச் சபையினர் உள்ளிட்ட பலரும் இதன்போது
கலந்துகொண்டிருந்தனர்.