தாய்லாந்தில் நடந்த திருவிழாவின்போது திடீரென
குண்டுவெடித்ததில் மூவர் பலியாகினர். 50 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.
தாய்லாந்தின் தக் மாகாணம் உம்பாங் நகரில் வருடாந்திர திருவிழா நடைபெற்றது.
இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். அப்போது, விழாவில் கலந்து கொண்ட இரு தரப்பினர் இடையே கைகலப்பு ஏற்பட்டது.
இதனால், ஆத்திரமடைந்த சிலர் அந்தக் கூட்டத்தை நோக்கி வெடிகுண்டு வீசினர்.
அது பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியதால் அங்கிருந்தவர்கள் நாலாபுறமும் சிதறியோடினர்.
இந்த குண்டுவெடிப்பில் 3 பேர் உடல் சிதறிப் பலியாகினர்.
50இற்கும் மேற்பட்டோருக்கு படுகாயம் ஏற்பட்டது. மீட்புப் படையினர் அவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
அவர்களில் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.
இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் இருவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.