சீனாவுக்கும், தாய்வானுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு இருந்து வருகிறது. இரண்டாம் உலக போரின் போது சீனாவில் இருந்து தாய்வான் தனியாக பிரிந்து ஆட்சி அமைத்தது.
ஆனால் தாய்வானை மீண்டும் தன்னுடன் இணைக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டு வருகிறது. மற்ற நாடுகளுடன் தாய்வான் வைத்திருக்கும் நட்புறவையும் சீனா கண்டித்து வருகிறது.
மேலும் தாய்வானை சுற்றி தனது இராணுவத்தினரை குவித்து சீனா போர் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.
இதனால் தாய்வான் பகுதியில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது.
அவ்வப்போது சீனா தாய்வான் நாட்டு எல்லைக்கு போர் விமானங்கள் மற்றும் போர் கப்பல்களை அனுப்பி மிரட்டலும் விடுத்து வருகின்றது.
இந்நிலையில் நேற்று சீனாவின் ஜே-10, ஜே-11, ஜே-16 உள்ளிட்ட ரக விமானங்கள் மற்றும் குண்டு வீசும் விமானங்கள் உட்பட 24 போர் விமானங்கள் தாய்வான் எல்லைக்குள் அத்து மீறி பறந்ததாக தாய்வான் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
சீன விமானங்களை தாய்வான் தனது போர் கப்பல்கள் மற்றும் நிலத்தில் இருந்து ஏவக்கூடிய ஏவுகணைகள் மூலம் கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.