வர்த்தகர் தினேஸ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் இதுவரையில் 90 பேரிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பல பிரிவுகளின் கீழ் விசாரணை இடம்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். தினேஸ் ஷாஃப்டர் மரணித்தமை தொடர்பில், மனித கொலை மற்றும் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுக்கான விசாரணை பிரிவும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, தினேஷ் ஷாஃப்டரின் மரணம் தொடர்பில் விசாரணை மேற்கொள்ளும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் பொலிஸ்மா அதிபர் சீ.டீ.விக்ரமரத்ன ஆகியோருக்கிடையே நேற்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இதன்போது, மரணம் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணை மற்றும் அதன் முன்னேற்றம் தொடர்பில் பொலிஸ் மா அதிபர் அதிகாரிகளிடம் விளக்கம் கோரியுள்ளார். அத்துடன் விசாரணை தொடர்பில் முன்னெடுக்கப்பட வேண்டிய எதிர்கால செயற்பாடுகள் குறித்தும் பொலிஸ்மா அதிபரால் அதிகாரிகளுக்கு தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.