திருகோணமலை கிண்ணியாவில் படகு விபத்து: இருவர் பலி

0
144

திருகோணமலை கிண்ணியா பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஈச்சந்தீவு களப்பு பகுதியில் படகு கவிழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளது.
கிண்ணியா ஆலங்கேணி பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய உதயரூபன் ஐஸ்மன் மற்றும் திருகோணமலையைச் சேர்ந்த 45 வயதுடைய புஷ்பராஜா ஆகியோர்
உயிரிழந்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த கிண்ணியா திடீர் மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.ஷாபி சடலங்களைப் பார்வையிட்டு விசாரணை முன்னெடுத்த பின்னர்
உடல் கூற்று அறிக்கைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலைக்குச் சடலங்களைக் கொண்டு செல்லுமாறு பொலிஸாருக்கு கட்டளையிட்டார்.