திருகோணமலை தென்னமரவாடி கந்தசாமி முருகன் ஆலய பௌர்ணமி பொங்கல் உற்சவத்திற்கு திருகோணமலை நீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மாதாந்த பௌர்ணமி தின பொங்கல் உற்சவம் இன்று ஏற்பாடு செய்யபட்ட நிலையில், கிராம மக்கள் பெருமளவானவர்கள் ஒன்றுகூடி, பொங்கல்
உற்சவத்திற்கான ஏற்பாடுகளை முன்னெடுத்தனர்.
திருகோணமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்களும், சிவில் சமூக செயற்பாட்டாளர்களும் பொங்கல் உற்சவத்திற்காக
வருகை தந்திருந்தனர்.
ஆலய வளாகத்திற்குள், கலவர தடுப்பு உபகரணங்களோடு வருகை தந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப்படையினர், பொங்கல் விழாவில்
கலந்துகொள்வதற்காக வருகை தந்தவர்களை அங்கிருந்து வெளியேற்றினர்.
பொங்கல் நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் சிலருக்கும் பொலிஸாரால், நீதிமன்ற தடையுத்தரவு ஆவணம் கையளிக்கப்பட்டு, பொங்கல்
நிகழ்வை நடாத்த வேண்டாம் என கூறப்பட்டது.