Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_util.php on line 1711
Warning: Array to string conversion in /home/u179857965/domains/eelanadu.lk/public_html/wp-content/plugins/td-composer/legacy/common/wp_booster/td_wp_booster_functions.php on line 675
இலங்கையின் சுற்றுலா தலமான திருகோணமலையில் உள்ள பிரடெரிக் கோட்டை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்காக திறக்கப்பட்டுள்ளது.திருகோணமலை கோட்டை பிரடெரிக் திருகோணமலை கோட்டை அல்லது திருக்குளிமலை கோட்டை என்றும் அழைக்கப்படுவது, காலியில் அமைந்துள்ள காலி டச்சுக் கோட்டையைப் போன்றே திருகோணமலை மாவட்டத்தில் உள்ள வரலாற்று, கலாசார மற்றும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு பழங்கால சுற்றுலா அம்சமாகும்.
இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் உள்ள திருகோணமலையில் போர்த்துகீசியர்களால் கட்டப்பட்ட இந்த பழமையான கோட்டை 1624 ஆம் ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.கோட்டைக்குள் அமைந்துள்ள பௌத்த விகாரை, இந்து கோவில் மற்றும் இராணுவ முகாம் ஆகியவற்றின் பணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் விசேட ஏற்பாடுகளுடன் பிரடெரிக் கோட்டை சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது.கோட்டை மற்றும் அதற்கு வெளியில் உள்ள நினைவுச்சின்னங்களை பாதுகாப்பான முறையில் பாதுகாப்பதுடன், அகழ்வு செய்யப்படவுள்ள பகுதிகள் பாதுகாக்கப்பட்டு துரிதமாக முடிக்கப்பட வேண்டும் என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் விதுர விக்கிரமநாயக்க விசேட பணிப்புரை விடுத்துள்ளார்.உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோட்டை பற்றிய தகவல்களை பெறுவதற்கு பல்வேறு புதுமையான முறைகளை தயாரித்து பயன்படுத்த ஏற்பாடு செய்யுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.