திருகோணமலை மேன்முறையீட்டு நீதிமன்றில் திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்தினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி

0
105

திருகோணமலை மாவட்ட நீதிமன்றில் திருக்கோணேஸ்வர ஆலய நிர்வாகத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு எதிராக திருகோணமலை சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல்
செய்யப்பட்ட வழக்கு தள்ளுபடி இன்று தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
மேன்முறையீட்டு நீதிபதியான நீதியரசர் பிரேம்சங்கர், நீதியரசர் இராமக்கமலன் ஆகியோர் முன்னிலையில், விசாரணைகளுக்காக வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே, மாவட்ட மேன்முறையீட்டு
நீதிமன்றம் வழக்கைத் தள்ளுபடி செய்தது.
இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த நீதியரசர்கள் எதிர்தரப்பினரால் முன்வைக்கப்பட்ட சட்ட ஆட்சேபனையின் அடிப்படையில் குறித்த வழக்கினை தள்ளுபடி
செய்து தீர்ப்பளித்தனர்.
வழக்காளி சார்பாக பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி ஐஸ்வர்யா சிவகுமார், ஜனாதிபதி சட்டத்தரணி சத்தார் மற்றும் சட்டத்தரணி புனிதவதி துஷ்யந்தன் ஆகியோரும்
எதிராளிகள் சார்பில் பதிவு செய்யப்பட்ட சட்டத்தரணி நாகராஜா மோகன், சிரேஷ்ட சட்டத்தரணி இராமலிங்கம் திருக்குமாரநாதன் மற்றும் சட்டத்தரணி கரிகாலன் ஆகியோர்
முன்னிலையாகினர்.