திருகோணமலை மஹதிவுல்வௌ குளத்திற்கு அண்மையில் உள்ள வயல் பகுதியிலிருந்து ஒரு தொகை துப்பாக்கி ரவைகள்
நேற்றைய தினம் பொலிசாரினால் மீட்கப்பட்டுள்ளன.
வயல் உரிமையாளர்களினால் மொரவவ பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையிலேயே
துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டன.
நெல் அறுவடை மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருந்தபோதே துப்பாக்கி ரவைகளை வயல் உரிமையாளர்கள் அவதானித்துள்ளனர்.
மேலதிக விசாரணைகளை மொரவௌ பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.