திருக்கேதீஸ்வரத்தை மீட்டு இலங்கையில் இந்தியா மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது – ஜெய்சங்கர்

0
144

‘தேவாரப் பாடல் பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரத்தை மீட்டதன் மூலம் இலங்கையில் இந்தியா மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். இந்தியா காசியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார். மேலும், இலங்கையில் மன்னாரில் உள்ள திருகேதீஸ்வரம் கோவிலை மீட்டுள்ளோம். பிரதமர் சில வருடங்களுக்கு முன்னர் ஆலயத்துக்கு சென்றிருந்தார். அந்த ஆலயம் 12 வருடங்கள் மூடப்பட்டிருந்தது. நாம் அந்த ஆலயத்தை புதுப்பித்து திறந்தோம். நாம் காட்டிய ஆர்வத்தால் அது சாத்தியமானது. பிரதமர் மோடி பதவியேற்றதன் பின்னர் எமது கலாசாரத்தையும் மரபுரிமையையும் பாதுகாப்பதோடு, இவ்வாறு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் ஒத்துழைப்பு வழங்குவதற்காகவும் வெளியுறவுத்துறை அமைச்சில் ஒரு தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது என கலாநிதி சுப்பிரமணியம் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.