32 C
Colombo
Friday, October 18, 2024
spot_img
spot_img
12,987FansLike
19,993SubscribersSubscribe

திருக்கோவில் பிரதேசத்தில் பொங்கல் பொருட்கள் வழங்கல்

அம்பாறை மாவட்டத்தில் 75 அறநெறிப் பாடசாலை மாணவர்களின் குடும்பங்களுக்கு பொங்கல் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வு கல்முனை சிவநெறி அறப்பணி மன்றத்தின் செயலாளர் லோகநாயகம் சரவணபவன் தலைமையில் திருக்கோவில் மண்டானை கிராம அறநெறிப் பாடசாலை மண்டபத்தில் இன்று நடைபெற்றது.

இவ் உதவியினை அவுஸ்திரேலிய அறம் அறக்கட்டளை மற்றும் சைவ மாணவர்கள் சபையின் நிதி உதவியுடன் கல்முனை சிவநெறி அறப்பணி மன்றத்தினால் வங்கி வைக்கப்பட்டுள்ளன.

இதன்போது திருக்கோவில் ஆலையடிவேம்பு நிந்தவூர் பிரதேசங்கள் உட்பட அம்பாறை மாவட்டத்தில் வறுமைக் கோட்டின் கீழ் வாழ்கின்ற சுமார் 75 அறநெறிப் பாடசாலை மாணவர்களின் குடும்பங்களுக்கு இப்பொங்கல் பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கி வைக்கப்பட்டன.

திருக்கோவில் பிரதேசத்தில் 40 குடும்பங்களுக்கு வழங்கி வைக்கப்பட்டுள்ளதுடன் இந்நிகழ்வில் திருக்கோவில் பிரதேச செயலாளர் ரீ.கஜேந்திரன் உதவிப் பிரதேச செயலாளர் கே.சதிசேகர் உதவித் திட்டமிடல் பணிப்பாளர் எம்.அனோஜா மற்றும் அமைப்பின் திருக்கோவில் பிரதேச இணைப்பாளர் லோ.சந்திரபவன் திருக்கோவில் பிரதேச செயலக சிரேஷ்ட உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Related Articles

- Advertisement -spot_img

Latest Articles