அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பிரதேச சபைக்கு உட்பட்ட வீட்டுத்திட்டம் எனும் கிராமத்தில் வறுமையில் வாழும் குடும்பமொன்றிற்கான வாழ்வாதார உதவிகள் வழங்கப்பட்டது.
மேல்மருவத்தூர் அருள்மிகு ஆதிபராசக்தி சித்தர் பீடம் கல்வி,சமூக நலம்,பண்பாடு அறப்பணி மையத்தின் ஊடாக குறித்த குடும்பத்திற்கு கோழிக்கூடு ஒன்றும் கோழிகளும் வழங்கி வைக்கப்பட்டது.
புலம்பெயர் நாட்டில் வசிக்கும் சுவிஸ்மன்ற சக்தி விஜி கிருபாகரனது நிதியுதவியில் அம்பாரை மாவட்ட பொறுப்பாளர் சக்தி திரு நவீன் தலைமையில் அவரது அறப்பணியாளர்கள் இணைந்து வழங்கினர்.