திருக்கோவில் பிரதேச விளையாட்டு
வீரர்களுக்கு சீருடைகள் வழங்கல்

0
203

அம்பாரை திருக்கோவில் மெதடிஸ்த மிசன் தமிழ் மகாவித்தியாலயத்தின் கால் பந்து விளையாட்டு வீரர் வீராங்கனைகளுக்கான சீருடைகளை திருக்கோவில் நேரு விளையாட்டுக் கழகத்தினர் அன்பளிப்பு செய்துள்ளனர்.இந்நிகழ்வானது திருக்கோவில் நேரு விளையாட்டுக் கழகத்தின் தலைவர் யுவராஜா சங்கீத்தின் தலைமையில் பாடசாலை ஒன்றுகூடல் மண்டபத்தில் இன்று இடம்பெற்று இருந்தன.

இந்நிகழ்வின் போது திருக்கோவில் கல்வி வலயத்தில் இருந்து கிழக்கு மாகாண கால் பந்து சுற்றுப் போட்டியில் நாளை பங்கு கொள்ளவுள்ள வீர வீராங்களைகளுக்கான சீருடைகளை வழங்கி வைத்திருந்தனர்.இவ் பாடசாலை மாணவர்கள் விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றும் போது போட்டிக்கான சீருடைகளை வேறு விளையாட்டு கழகங்களில் இருந்து பெற்று கொண்டே விளையாட்டுப் போட்டிகளில் பங்கு பற்றி பல வெற்றிகளை பிரதேசத்திற்கு தேடிக் கொடுத்து இருந்த போதிலும் பாடசாலைக்கான தனியான ஒரு சீருடையை இல்லாது இருந்தன.

இதனைக் கருத்தில் கொண்டு இம்முறை கிழக்கு மாகாண கால் பந்து சுற்றுப் போட்டிக்கு இவ் பாடசாலை அணிகள் தெரிவாகி இருந்த நிலையில் அவர்களுக்கான 30 மேலங்கி சீருடைகளை திருக்கோவில் நேரு விளையாட்டுக் கழக நிருவாகிகள் வழங்கி வைத்திருந்தனர்.இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் திருமதி ஜீ.கே.தட்சணாமூர்த்தி பாடசாலை உடற்கல்வி ஆசிரியர் யு.கே.பஷாத் நேரு விளையாட்டுக் கழக நிருவாகிகள் பாடசாலை ஆசிரியர்கள் மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டு இருந்தனர்