திருக்கோவில் அருள்மிகு ஸ்ரீஅக்கிராசப் பிள்ளையார் ஆலய ஆவணி சதுர்த்தி அலங்கார உற்சவத்தின் பாற்குட பவனி நேற்று இடம்பெற்றது.
திருக்கோவில அருள்மிகு ஸ்ரீ சகலகலை அம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமான பாற்குட பவனி அக்கிராச பிள்ளையார் ஆலயத்தை வந்தடைந்தது.
தொடர்ந்து பக்தர்களின் அரோகரா கோசங்களுக்கு மத்தியில் பிள்ளையாருக்கு பால் அபிசேகம், விசேட பூசை வழிபாடுகள் நடைபெற்றது.
இவ் ஆலய உற்சவமானது கடந்த 22 ஆம் திகதி ஆரம்பமாகியது. எதிர்வரும் 31 ஆம் திகதி தீர்த்தோற்சவத்துடன் உற்சவம் நிறைவு பெறவுள்ளது.