திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய நபர் கைது

0
181

யாழ்ப்பாணம் சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குப்பிளான் வடக்கு பகுதியில் பல திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய ஒருவர் யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பொலிசார் தெரிவித்துள்ளனர். அண்மைய நாட்களில் குப்பிளான் மற்றும் புன்னாலை கட்டுவன் பகுதிகளில் நீர் இறைக்கும் மின் மோட்டார் இயந்திரங்கள், துவிச்சக்கர வண்டிகள் மற்றும் எரிவாயு சிலிண்டர்கள் திருட்டு போனதாக தெரிவித்து சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகள் பதிவாகியிருந்தன. இந்நிலையில் யாழ் மாவட்ட குற்றதடுப்பு பிரிவிற்கு கிடைத்த விசேட தகவலுக்கு அமைய குப்பிளான் வடக்கு கம்பம் புலம் பகுதிக்கு விரைந்த யாழ் மாவட்ட குற்றத்தடுப்பு பிரவினர் 7 துவிச்சக்கர வண்டிகள், 4 மோட்டார் இயந்திரங்கள், 2 எரிவாயு சிலிண்டர்களை கைப்பற்றியதோடு குறித்த திருட்டில் ஈடுபட்ட சந்தேகத்தின் அடிப்படையில் 27 வயதான அதே பகுதியைச் சேர்ந்த இளைஞனை கைது செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட இளைஞனிடம் இருந்து 80 மில்லிகிராம் ஹெரோயினும் கைப்பற்றப்பட்டுள்ளது.