அமெரிக்காவில் மர்மநபரொருவர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கெண்டகி மாகாணம் லுயிஸ்வெலி பகுதியில் சாரதி உரிமம் பதிவு அலுவலகத்தின் வாகனம் நிறுத்தும் இடத்துக்கு வந்த நபர் திடீரென குறித்த இடத்திலிருந்தவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் படுகாயமடைந்தவர்களை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்ட நிலையில் இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். இந்தச் சம்பவம் குறித்து வழக்குப் பதிவுசெய்து துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றவர் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகின்ற நிலையில், தனி நபர்கள் துப்பாக்கி வைத்திருக்க அரசு அனுமதித்துள்ளது. அதை பயன்படுத்துவதற்கும் எண்ணற்ற கட்டுப்பாடுகள் உள்ளன. 18 வயதுக்குட்பட்ட தனிநபர்கள், தண்டனை பெற்ற குற்றவாளிகள், மனநலம் குன்றியவர்கள் உள்ளிட்டோர் துப்பாக்கி வைத்திருக்கத் தடையும் உள்ளது.
எனினும், பல்வேறு இடங்களில் துப்பாக்கிச்சூட்டுச் சம்பவங்கள் அதிகளவில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.