வலஸ்முல்ல பகுதியில் நேற்று இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் நடத்தப்பட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தனியார் காணி ஒன்று தொடர்பில், ஏற்பட்ட வாய்த்தர்க்கம், பின்னர் துப்பாக்கிச்சூட்டை நடத்துவதற்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வலஸ்முல்ல யஹல்முல்ல பகுதியில் நேற்று நடத்தப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் பெண் ஒருவர் உள்ளிட்ட மூன்று பேர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பெலியத்த பொலிஸ் நிலையத்தில் சேவையாற்றும், பொலிஸ் உத்தியோகத்தரே, இந்த துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளார்.
சம்பவத்தின் பின்னர், சந்தேகநபர் தலைமறைவாகியுள்ள நிலையில், அவரை கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.