துருக்கி மற்றும் சிரியாவை புரட்டிப்போட்டுள்ள நிலநடுக்கத்தில் இதுவரை 7,200 பேர் வரையில் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நிலநடுக்கத்தில், கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கிக்கொண்ட தனது மகளின் கையை பிடித்தபடி தந்தை ஒருவர் காத்திருக்கும் காட்சி பலரையும் கலங்கவைத்துள்ளது. 15 வயதான சிறுமி கட்டிட இடிபாடுகளில் சிக்கிக்கொள்ளஇ தந்தை தனது மகளின் வெளியே தெரியும் கைகளை மட்டும் கோர்த்தபடி காணப்படுகிறார். இந்தக் காட்சி அனைவரின் மனதையும் கலங்க வைத்துள்ளது. இதேவேளை ஆயிரக்கணக்கான சிறார்கள் இடிபாடுகளில் சிக்கி மரணமடைந்திருக்கலாம் எனவும் பலர் கட்டிட இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
கடும் குளிர்இ பனிப்பொழிவு காரணமாக மீட்பு நடவடிக்கைகள் தாமதமடைவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, இரண்டு நாடுகளிலும் மொத்தமாக இறப்பு எண்ணிக்கை 20,000 வரை அதிகரிக்கலாம் எனவும் 1.4 மில்லியன் சிறார்கள் உட்பட மொத்தம் 23 மில்லியன் மக்கள் பாதிக்கப்படலாம் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆயிரக்கணக்கானோர் மீட்பு நடவடிக்கையில் களமிறக்கப்பட்டுள்ளனர். மேலும் அடுத்த 24 முதல் 48 மணி நேரம் மிக முக்கியம் எனவும் முதல் நிலநடுக்கம் பதிவாகிய பின்னர் சுமார் 200 நில அதிர்வுகளும் பதிவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.