யாழ்ப்பாணம் சாவகச்சேரியில், தென்னம் பொச்சுக்களை ஏற்றி வந்த வாகனம் விபத்திற்குள்ளானதில், சாரதி காயமடைந்துள்ளார்.
சாவகச்சேரி நுணாவில் ஏ9 வீதியில், இன்று பிற்பகல் 3.00 மணியளவில், பட்டா வாகனம், கட்டுப்பாட்டை இழந்து, வீதியை விட்டு விலகி, மதிலை உடைத்துக் கொண்டு விபத்திற்குள்ளானது.
சாவகச்சேரியில் இருந்து தென்னம் பொச்சுக்களை ஏற்றிக்கொண்டு, யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த வேளை, விபத்து இடம்பெற்றுள்ளது.
இந்த நிலையில், சாவகச்சேரி பொலிஸார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.